அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
காந்த குரலோன் கே.ஜே.யேசுதாஸ், கேரளத்தின் வானம்பாடி. அவரது மகன் விஜய் யேசுதாஸ். அவரும் பாடகர். தென்னிந்திய மொழிகளில் பாடி வருகிறார். ஆனாலும் விஜய் யேசுதாசுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் கனவு. ஆனால் யேசுதாசுக்கு தன் மகன் தன்னைப்போல பெரிய பாடகராக வர வேண்டும் என்றுதான் ஆசை. அதனால் மகனின் நடிப்பு ஆசைக்கு தடைபோட்டு வந்தார். என்றாலும் அதையும் மீறி விஜய் யேசுதாஸ் மலையாளத்தில் ஒரு படத்தில் பாடகராக சிறிய கேரக்டரில் நடித்தார்.
அதன் பிறகு தனுஷ் நடிப்பில் உருவான மாரி படத்தில் வில்லனாக அறிமுகமானார். மகன் நடிப்பது பிடிக்காத யேசுதாஸ், சில காலம் அவருடன் பேசாமல் இருந்தார். அதுவும் வில்லனாக நடித்திருப்பதால் மாரி படத்தை பார்க்காமல் இருந்தார். இதுகுறித்து விஜய் யேசுதாஸ் கூறும்போது, "நான் சினிமாவில் நடிப்பது அப்பாவுக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. அப்பாவுக்கு மட்டுமல்ல என் குடும்பத்தில் யாருக்குமே பிடிக்கவில்லை. சினிமாவில் நடித்தால் குரல் வளம் குறைந்துவிடும் என்று அப்பா கருதினார். ஆனால் நடிப்பது எனக்கு பிடிக்கும். என் மேல் உள்ள கோபத்தில் அப்பா நான் நடித்த எந்தப் படத்தையும் பார்க்கவில்லை". என்றார்.
இந்த நிலையில் தான் விஜய் யேசுதாஸ் நடித்த படைவீரன் படம் வெளிவந்திருக்கிறது. அதில் விஜய் யேசுதாசின் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. தற்போது தனது வைராக்கியத்திலிருந்து இறங்கி வந்திருக்கும் யேசுதாஸ், படைவீரன் படத்தை பார்த்தார். மகன் நடிப்பை பார்த்து பூரிப்படைந்தார். மகன் விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டினார். இதனால் விஜய் யேசுதாஸ் தற்போது மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.