பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் சற்குணம் அறிமுகமான படம் களவாணி. இதில் தான் விமல் சோலோ ஹீரோவாக அறிமுகமானார். ஓவியாவும் அறிமுகமானார். 8 வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தை இயக்கிய சற்குணமே இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த விமலும், ஓவியாவும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு தொடங்கி விட்டது என்று சற்குணம் தெரிவித்திருந்தார்.
ஆனால் களவாணி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நசீர், தான் களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப்போவதாகவும், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எனது தயாரிப்பு நிறுவனமான ஷெராலி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த "களவாணி" படத்தின் இரண்டாம் பாகத்தை "களவாணி 2" என்ற பெயரில் தயாரிக்கவுள்ளேன், இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் தெரிவிக்கிறேன். "களவாணி 2" படத்திற்கான படத்தலைப்பின் உரிமையைத் தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்து ஒப்புதல் பெற்றுள்ளேன்.
இவ்வாறு நசீர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு அவர் அனுப்பியுள்ள புகார் மனுவில் "களவாணி 2 படத்தை நான் தயாரிக்கிறேன். ஆனால் சற்குணம் தனது படத்துக்கு கே 2 என்று பெயர் வைத்தாலும் களவாணி 2 என்றே குறிப்பிடுகிறார். களவாணி படத்தின் தலைப்பு என்னிடமே உள்ளது. அதை சற்குணம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.