ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை கவுதமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர். அதனால் தன்னைபோன்று யாரும் புற்றுநோயால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் லைப் அகெய்ன் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
உலக புற்றுநோய் தினத்தையொட்டி நேற்று இந்த அமைப்பின் சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களைக் கொண்ட வின்னர்ஸ் வாக் என்ற நிகழ்ச்சியை நடத்தினார். பெசண்ட் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கவுதம் மேனன், மோகன்ராஜா, ராஜகுமாரன், நடிகை தேவயானி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் சாந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கவுதமி பேசியதாவது:
டாக்டர் சாந்தா தமிழ்நாட்டை புற்றுநோய் இல்லாத மாநிலமாக மாற்ற நிறைய முயற்சிகளை மேற்கொண்டார். அவருக்கு மிகப்பெரிய நன்றி. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், கேன்சரை குணப்படுத்தலாம் அதை வெல்லலாம் என்ற எண்ணம் எல்லோருக்கும் தெரிய வர வேண்டும் என்பதே. கேன்சர் என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரும் பயப்படுகிறார்கள். அதை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை நமக்கு வேண்டும்.
முக்கியமாக கேன்சரை ஆரம்பகால கட்டத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முயன்றால் முழுமையாக குணப்படுத்த முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பற்றி மற்றவர்களுக்கும் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் கூற வேண்டும் என்றார் கவுதமி.