மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பழம் பெரும் திரைப்பட பாடகர் சிதம்பரம் ஜெயராமன். தனித்துவமான மந்திர குரலுக்கு சொந்தக்காரர். நாடக நடிகராக வாழ்க்கையை துவங்கி பாடகர் ஆனவர். “ விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவே... “ “ நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்..“ “ குற்றம் புரிந்தவர் வாழ்கையில் நிம்மதி கொள்வதென்பதேது... “ “ வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என் அருகில் வந்தாள்... “ “ இன்று போய் நாளை வாராய்... “ “ காவியமா இல்லை ஓவியமா... ? “ அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம் ...“ உள்பட காலத்தை வென்று நிற்கும் பாடல்களை பாடியவர்.
சுமார் 500 பாடல்களுக்கு மேல் பாடிய இவரது நூற்றாண்டு விழா பிப்ரவரி 7 ம் தேதி சென்னை மைலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சன சபாவில் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவை தி.மு.க தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மனைவியும், சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் மகளுமான எம்.சிவகாமசுந்தரி ஏற்பாடு செய்துள்ளார். இசை துறையை சேர்ந்தவர்கள், திரைப்படக் கலைஞர்கள், அரசியல் தலைவர்களும் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.