'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவில் நடிகை ஒருவருக்கு திருமணம் நடந்து விட்டால், அத்துடன் அவருடைய இமேஜ் போய்விட்டது என்று சொன்னதெல்லாம் அந்தக் காலம் ஆகிவிட்டது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போதுள்ள நடிகர், நடிகைகளின் திரையுலக வாழ்க்கையைப் பெரிதும் பாதிப்பதில்லை. அதற்கு சமீபத்திய உதாரணம் சமந்தா. திருமணம் முடிந்த பின்னும் அவருக்கான இமேஜ் தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் அப்படியேதான் உள்ளது.
சமந்தா நடித்து கடந்த வருடம் தீபாவளிக்கு வெளிவந்த 'மெர்சல்' படம் பெரிய வெற்றியைப் பெற்றது. மூன்று கதாநாயகிகளில் ஒருவராக சமந்தா சில காட்சிகளில் நடித்திருந்தாலும், 'தம்பி ரோஸ் மில்க் வாங்கித் தர்றேன்டா' வசனம் அவரை ரசிகர்களிடம் நன்றாகவே கொண்டு போய் சேர்த்தது. சமந்தா நடித்து தெலுங்கில் கடந்த வருடம் வெளிவந்த ஒரே படமான 'ராஜு காரி கதி 2' படம் தோல்விப் படமாக அமைந்தது. கடந்த ஆண்டில் தமிழ், தெலுங்கில் சமந்தா நடித்து தலா ஒரு படம்தான் வெளிவந்தது.
ஆனால், 2018ம் ஆண்டில் சமந்தா நடித்துள்ள மூன்று படங்கள் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளன. விஷால் ஜோடியாக சமந்தா நடித்துள்ள தமிழ்ப் படமான 'இரும்புத் திரை' தெலுங்கிலும் டப்பிங் ஆகி மார்ச் 29ம் தேதி இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகியுள்ள சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான 'மகாநதி (தெலுங்கு), நடிகையர் திலகம் (தமிழ்)' படமும் மார்ச் 29ம் தேதியே வெளியாகின்றன. அதோடு தெலுங்கில் ராம் சரண் தேஜா ஜோடியாக சமந்தா நடித்துள்ள 'ரங்கஸ்தலம்' படம் மார்ச் 30ம் தேதி வெளியாகிறது.
ஒரே சமயத்தில் மூன்று படங்களின் பிரமோஷன்களிலும் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் சமந்தா. மூன்று படங்களுமே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக அமைந்துள்ளன.