'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியாவில் பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரத்தா கபூர். தற்போது பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படம் மூலம் தென்னிந்திய சினிமாவிற்குள் என்ட்ரியாகியிருக்கிறார். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராவதால், சில க்ளோசப் காட்சிகளில் அந்தந்த மொழிகளில் டயலாக் பேசி நடிக்கிறார். மேலும், இதுவரை ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் பிரபாசுடன் நடித்து வந்த ஸ்ரத்தா கபூர், பிப்ரவரி மாதம் துபாய் சென்று சாஹோ படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஸ்ரத்தா கபூர் கமிட்டாகி விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை தற்போது ஸ்ரத்தா கபூர் மறுத்துள்ளார். அதோடு, தெலுங்கில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆசை எனக்குள் உள்ளது. என்றாலும், தற்போது சாஹோ படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதால் மற்ற படங்களிலும் கமிட்டானால் கால்சீட் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் சாஹோ படப்பிடிப்பு முடிந்த பிறகே புதிய தெலுங்கு படங்களில் கமிட்டாகும் முடிவில் இருக்கிறேன்.
அதனால் ஜூனியர் என்டிஆர் மட்டுமின்றி வேறு ஒரு ஹீரோவின் படத்தில் நடிக்கவும் என்னிடம் பேசியிருக்கிறார்கள். அந்த படநிறுவனங் களிடம் சாஹோ முடிந்த பிறகு சொல்கிறேன் என்று கூறியிருக்கிறேன் என்கிறார் ஸ்ரத்தா கபூர்.