ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் வாரம் வாரம் குறைந்தது நான்கைந்து படங்களாவது ரிலீஸாகின்றன. இதில் சின்ன பட்ஜெட் படங்கள் அதிகம். ஆனால் அப்படிப்பட்ட படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது இல்லை என்பது உண்மை. இதை முறைப்படுத்த வேண்டும் சினிமா துறையில் இருக்கும் ஒவ்வொரு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பேசிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் அதற்கான தீர்வு மட்டும் கிடைத்தபாடில்லை.
இந்நிலையில் பிப்., 2-ம் தேதியான நேற்று விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், விஜய் யேசுதாஸின் படைவீரன், சண்முக பாண்டியனின் மதுரவீரன், சமுத்திரகனி, சாம் ஜோன்ஸின் ஏமாலி போன்ற படங்களுடன், புதியவர்கள் நடிப்பில் விசிறி என்ற படமும் ரிலீஸாகி உள்ளன. இதில் விசிறி படத்தின் நிலை மிகவும் பரிதாபம். இப்படத்திற்கு மிக குறைந்த அளவிலயே தியேட்டர் கிடைத்திருக்கிறது. இதனால் தன் வேதனையை தெரிவித்திருக்கிறார் இப்பட இயக்குநர் வெற்றி மகாலிங்கம்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பிப்ரவரி 2-ல் விசிறி படம் வெளியீடு என்று கடந்த மாதமே விளம்பரம் செய்தோம். இடையில் பெரிய நடிகர்கள் படத்தை வெளியிடுகிறார்கள். எங்களுக்கு பெரியளவில் தியேட்டர் கிடைக்கவில்லை. நிறைய மேடைகளில் சின்ன படங்களுக்கு ஆதரவு பண்றோம் என்று பல பேர் மேடையில் பேசுகிறார்கள். அவ்வளவும் பொய்யாக பேசுகிறார்கள். தயவு செய்து இனி யாரும் சின்ன படத்தை எடுக்க வராதீர்கள். உங்களை குழி தோண்டி புதைத்துவிடுவார்கள் என்று தன் ஆதங்கத்தை கொட்டினார்.