ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் வெளியான கொடிவீரன் படத்தில் சசிகுமாரின் தங்கையாக, நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் நடிகை சனுஷா. சில தினங்களுக்கு முன் கேரளாவில் ரயிலில் இவர் பயணம் செய்தபோது, இவரிடம் இளைஞர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபடவே, துணிச்சலாக அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அந்த நபரை போலீஸில் பிடித்து கொடுத்தார் சனுஷா.
சனுஷாவின் இந்த துணிச்சலான நடவடிக்கையை கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா பாராட்டியுள்ளார். சனுஷாவின் இந்த செயல், தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை தருவதாகவும், தவறு செய்பவர்களை கண்டு அஞ்சாமல் தைரியமாக முடிவெடுக்க பெண்களுக்கு ஊக்கம் தருவதாகவும் அமைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.