'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அரசியல் பயணத்தில் தீவிரமாக களமிறங்கி உள்ள கமல், சென்னை, விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து அவர் கூறுகையில், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக நான் கருதவில்லை. நாம் பல காலமாக புறக்கக்கப்பட்டு தான் இருக்கிறோம். இருந்தாலும் இந்த பட்ஜெட்டில் சில நன்மைகள் உள்ளன. மத்திய அரசின் கடைக்கண் பார்வை விவசாயிகள், கிராமங்கள் பக்கம் திரும்பியிருப்பது வரவேற்கதக்கது. ஆனால் நடுத்தர மக்களுக்கு இந்த பட்ஜெட் பாராமுகமாக உள்ளது. இதுப்பற்றி அறிஞர்களுடன் கலந்து பேசி, மேலும் என் கருத்தை சொல்கிறேன் என்றார்.