தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
நடிகை கவுதமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர். தன்னைப்போன்று யாரும் அந்த நோயால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக லைஃப் எகெய்ன் (மீண்டும் வாழ்க்கை) பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலம் புற்று நோய்க்கு எதிராக போராடி வருகிறார். அதன் ஒரு பகுதியாக வருகிற 4ந் தேதி புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களை ஒருங்கிணைத்து வின்னர்ஸ் வாக் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி உலக புற்று நோய் தினம். இதை வலியுறுத்த எங்களது லைஃப் எகெய்ன்பவுண்டேஷன் வெற்றியாளர்களின் நடை என்ற தொடர் நடை நிகழ்வை பிப்ரவரி 4ஆம் தேதி காலை 7 மணிக்கு அடையார் ஆல்காட் பள்ளி வளாகத்தில் நடத்த உள்ளது.
இன்றைய நடைமுறை உலகில் தவிர்க்க முடியாத நோய்களில் ஒன்றாக உள்ளது புற்றுநோய். இந்தியர்களான நாம் அன்றாடம் பலத்தரப்பட்ட புற்றுநோய்களுக்கு ஆளாகும் நிலையில் இருக்கிறோம். இதை எதிர் கொள்வதற்கு நம்மிடமுள்ள மிகப்பெரிய ஆயுதம் அதை பற்றி அறிந்து கொள்வதும் அதற்காக தயாராக இருப்பதும் தான்.
உறுதியான மனதும், உடனடியாக அணுகுமுறையும் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள இன்றியமையாதவை. புற்றுநோயை விடவும் பெரிய போராட்டமும் சவாலும் எதுவும் கிடையாது. இந்த புற்றுநோயை உண்மையான உறுதியுடனும் புன்னகையுடனும் தைரியத்துடனும் எதிர்கொண்டு வென்ற நாயகர்கள் பலர் உண்டு. இவர்களே எனக்கு மிகப்பெரிய முன்னுதாரணங்கள்.
எங்களது இந்த வெற்றியாளர் நடை இந்த நாயகர்களை முன்னிறுத்தி ஒவ்வொருவருக்கும் தங்களையும் தங்களது அன்புக்குடையவர்களையும் புற்றுநோயை எதிர்கொள்ள தயார்படுத்தி கொள்ள உதவும். புற்றுநோயின் சவாலை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்தி கொள்வது வாழ்க்கையின் மற்ற ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சவால்களை எதிர்கொள்ள உதவும். உங்கள் உற்றார் உறவினருடன், குடும்பத்தினருடனும் மற்றும் நண்பர்களுடனும் வந்து எங்களுடன் கலந்து கொள்ளுங்கள். எங்களுடன் நடந்து பல உயிர்களை காப்பாற்ற முன் வாருங்கள். இவ்வாறு கவுதமி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.