ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பத்திரிகையாளராக இருந்த ஏ.வெங்கடேசை மகாபிரபு படத்தின் மூலம் இயக்குனர் ஆக்கியவர் சரத்குமார், அதன் பிறகு வெங்கடேஷ் இயக்கத்தில் ஏய், சாணக்யா, சண்டமாருதம் படத்தில் நடித்தார். இப்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இவரும் இணையும் புதிய படத்திற்கு பாம்பன் என்று பெயர் வைத்துள்ளனர். இதில் சரத்குமார் அனகோண்டா பாம்பாக மாறியிருக்கும் படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் வெங்கடேஷ்.
இந்தப் படத்தை எஸ்.எஸ்.கே பிலிம்ஸ் சார்பில் சங்கரலிங்கம் தயாரிக்கிறார், ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார், என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்படுகிற பேண்டஸி படம். நீயா படத்தில் ஸ்ரீப்ரியா பாம்பாக நடித்தது போன்று இதில் சரத்குமார் பழிவாங்கும் பாம்பாக நடிப்பதாக கூறப்படுகிறது. சரத்குமார் படங்களிலேயே இந்தப் படம் அதிக பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தயாரிப்பு தரப்பு செய்திகள் தெரிவிக்கிறது.