டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜெய்சிம்ஹா படத்தை அடுத்து தனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து நடிக்கிறார் பாலகிருஷ்ணா. தேஜா இயக்கும் இந்த படத்தின் பிரீ புரொடக்சன்ஸ் வேலைகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. மேலும், இந்த படத்தில் நடிப்பதற்கு சில முன்னணி நடிகர் நடிகைகளிடம் பேசி வருகிறார் பாலகிருஷ்ணா.
மேலும், என்டிஆர் முதலமைச்சரானபோது அவருக்கும், அப்போதைய பிரதமரான இந்திராகாந்திக்குமிடையே அரசியல் ரீதியாக மோதல் நடந் தது. அதனால் அந்த காட்சிகளும் படத்தில் முக்கியத்துவம் பெறுகிறதாம். ஆனால் இந்திராகாந்தி வேடத்தில் நடிக்க பவர்புல்லான நடிகை வேண்டும் என்பதால், விஜயசாந்தி, ரம்யாகிருஷ்ணன், நதியா ஆகிய மூன்று பேரில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பரிசீலனை செய்து வருகிறார் பாலகிருஷ்ணா.