புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
பாகுபலி-2 படத்தை இயக்கிய ராஜமவுலி, தனது அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கயிருப்பதாக ஏற்கனவே கூறிவிட்டார். அதையடுத்து ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கினார். ஆனால் இன்னும் கதை எழுதும் பணி முடியவில்லையாம். இரண்டு மாதத்திற்குள் கதை எழுதும் வேலைகள் அனைத்தும் முடிந்து விடும் என்று கூறியுள்ள ராஜமவுலி, தற்போது படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளிடமும் கால்சீட் பேசிக்கொண்டிருக்கிறாராம்.
மேலும், ஜூனியர் என்டிஆர் தற்போது திரிவிக்ரம் இயக்கும் படத்திலும், ராம்சரண் ரங்கஸ்தலம் படத்திலும் நடித்து வருவதால், அவர்கள் இந்த படங்களை முடித்த பிறகு ராஜமவுலி படத்திற்கு வருகிறார்களாம். அதனால், 2018 ஜூன் மாதத்திற்கு பிறகு தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கி 2019ம் ஆண்டு புதிய படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் ராஜமவுலி.