பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
மம்முட்டி நடித்த 'கசபா' படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக வசனங்கள் இருப்பதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடிகை பார்வதி பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதன்காரணமாக அவர் மீது மம்முட்டியின் ரசிகர்கள் பலர் சோஷியல் மீடியாவில் வசைமாரி பொழிய, மம்முட்டி நேரடியாக தலையிட்டு அவர்களை அடக்கி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால் பார்வதி இப்போதும் அதை விடுவதாக தெரியவில்லை. சமீபத்தில் அவர், இந்த விஷயத்தில் மம்முட்டி தனது ரசிகர்களுக்கு என்ன கூறினாரோ, அதில் தனக்கு அவ்வளவாக திருப்தி இல்லை என்றும், ஆனாலும் அவர் இந்த விஷயத்தில் தனக்கு உதவுவதற்காக முன்வந்ததற்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, பல நடிகைகள் பரபரப்பை கிளப்பிய 'காஸ்டிங் கவுச்' விஷயம் தொடர்பாக விரைவில் தானும் சில தகவல்களை வெளியிட இருப்பதாக பகீர் கிளப்பியுள்ளார் பார்வதி. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட சிலரின் பெயர்களை வெளியிட்டபின் மக்கள் ஆதரவு தனக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் எனவும் ஒரு சஸ்பென்ஸ் வைத்துள்ளார் பார்வதி.
வடிவேலு பட காமெடி பாணியில் சொன்னால், “இன்னும் எத்தனை தலை உருளப்போகிறதோ..?”