ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது' படத்தை இயக்கிய மருதுபாண்டியன் இயக்கத்தில் சசிகுமார், நந்திதா மற்றும் பலர் நடிக்கும் 'அசுர வதம்' படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த ஒரு மாத காலமாக கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
'கொடி வீரன்' படத்திற்குப் பிறகு சசிகுமார் நடித்து முடித்துள்ள படம் 'அசுர வதம்'. இப்படம் முடிவடைவதற்கு முன்பே சசிகுமார், சமுத்திரக்கனி இயக்கத்தில் 'நாடோடிகள் 2' படத்தில் கடந்த வாரம் முதல் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது 'நாடோடிகள் 2' படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
'அசுர வதம்' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்த பின் படத்தை கோடை விடுமுறையில் வெளியிட வாய்ப்புள்ளது.