ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகுபலி படம் மூலம் இந்தியாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ராஜமெளலி. இவரின் தந்தை கேவி.விஜயேந்திர பிரசாத் தான் இப்படத்திற்கு கதை எழுதினார். இதன்மூலம் இவரும் இந்தியா அளவில் பேசப்பட்ட கதாசிரியரானார். சல்மான் பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதையும் இவருடையது தான். தற்போது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கதை எழுதும் வாய்ப்பை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அடுத்தப்படியாக ஷாரூக்கான் படத்திற்கு விஜயேந்திர பிரசாத் கதை எழுத உள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் விஜயேந்திர பிரசாத், ஷாரூக்கானை சந்தித்து கதை கூறியிருக்கிறார். இந்த கதை பழிவாங்கும் கதையில் ஆக்ஷ்ன் நிறைந்த படமாக, ஷாரூக்கானுக்கு ஏற்ற கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இவர்கள் இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.