மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சென்னை:நடிகை அமலாபாலுக்கு, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த, தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர், அமலாபால். இவர், தமிழ், மலையாளம் பட உலகில், முன்னணி நடிகையாக உள்ளார். இயக்குனர், விஜய் என்பவரை, காதல் திருமணம் செய்து, விவகாரத்து பெற்றார். புதுச்சேரி முகவரியில், சொகுசு கார் வாங்கி, 20 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக, இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. சில தினங்களுக்கு முன், கொச்சி குற்றப்பிரிவு போலீசார், அமலாபாலை கைது செய்து, பின் ஜாமினில் விடுவித்தனர்.
இந்நிலையில், அவர், பிப்.,3ல், மலேசியாவில் நடக்க உள்ள, 'டான்சிங் தமிழச்சி' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதற்காக, தி.நகரில், நடன இயக்குனர், ஸ்ரீதரின் பள்ளியில், நடிகர், நடிகையருடன், நடன ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்.
அங்கு வந்த, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த, அழகேசன் என்பவர், அமலாபாலிடம், 'என் நண்பர், மலேசியாவில் உள்ளார்; அவருடன் டின்னர் சாப்பிட வருகிறீர்களா' என, கேட்டுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அமலாபால், நேற்று, மாம்பலம் போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து போலீசார் விசாரித்து, அழகேசனை கைது செய்தனர். இவர் தொழில் அதிபர் என, கூறப்படுகிறது.
அமலா பால் கூறுகையில், ''என்னைப்போல, தனியாக இருக்கும், உழைக்கும் பெண்கள், இதுபோன்ற பிரச்னையை சந்திக்க நேரிடுகிறது.மற்ற பெண்களுக்கு, இதுபோன்ற பிரச்னை, ஏற்படக் கூடாது என்பதற்காக, புகார் அளித்தேன்,''என்றார்.