ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்நாட்டில் தான் பல நடிகர்கள் அரசியல் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்று பார்த்தால், ஆந்திரா, தெலுங்கானாவிலும் அதே நிலைமை தான் உள்ளது. தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால் ஆகியோர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். ஆந்திரா, தெலுங்கானாவில் பவன் கல்யாண் அதே போல தீவிரமாக இருக்கிறார்.
தெலுங்கு மாநிலங்களின் அரசியலில் நடிகைகளுக்கும் எப்போதும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. விஜயசாந்தி, ஜெயப்பிரதா, ஜெயசுதா ஆகியோர் தீவிர அரசியலில் இருந்தவர்கள். தற்போதுதான் அரசியலிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு ரோஜா தீவிர அரசியலில் இறங்கி தற்போது நகரி தொகுதி எம்எல்ஏ-வாகவும் உள்ளார்.
2019ம் ஆண்டு தெலுங்கானா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் சட்டசபை தொகுதியில் தற்போதைய ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சார்பாக நடிகை சமந்தா நிற்கப் போவதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. கிறிஸ்துவர்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் சமந்தாவிற்கு வெற்றி வாய்ப்பு எளிதாக இருக்கும் எனக் கருதுகிறார்களாம். தெலுங்கானா மாநில கைத்தறி தூதர் ஆக சமந்தா நியமிக்கப்பட்டதற்கும் அதுதான் காரணம் என்றும் சொல்கிறார்கள்.
சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால், விரைவில் அரசியலில் இறங்கும் எண்ணம் இல்லை என்று சொன்னாலும் சொல்வார்.