தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கான படப்பிடிப்பில் நேற்று ரேக்ளா பந்தயக் காட்சி படமாக்கப்பட்டது.
அந்தப் படப்பிடிப்பை படத்தின் தயாரிப்பாளரும், நாயகன் கார்த்தியின் அண்ணனுமான சூர்யா, அவருடைய மகன் தேவ்வுடன் பார்த்து ரசித்தார். ரேக்ளா காட்சி படப்பிடிப்பை அவர் மொபைலில் படமாக்கிய காட்சியையும், மகனுடன் அவர் பார்ப்பதையும் வீடியோவாக்கி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
“சிறு வயதில் மனதில் இடம் பிடித்த சில இடங்களை மகனுடன் பார்த்தேன்,” என அவர் பதிவிட்டுளளார்.
அண்ணன் தயாரிப்பில் தம்பி நடிக்கும் குடும்பப் படமாக உருவாகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை சூர்யா தயாரித்த 'பசங்க 2' படத்திற்குப் பிறகு பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு இசை டி. இமான். ஒரு குறுகிய காலத் தயாரிப்பாக படத்தை எடுத்து முடித்து சில மாதங்களில் வெளியிட உள்ளார்கள்.