பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் ஷாரூக்கானின் பண்ணை வீட்டை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாரூக்கான், இவர் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு, மகாராஷ்டிரா மாநிம், அலிபாக் கடற்கரை அருகே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. விவசாயம் செய்யப்போவதாக கூறியே இந்த நிலத்தை வாங்கியிருக்கிறார் ஷாரூக்கான். ஆனால் அதை மீறி ஆடம்பரமாக வீட்டை கட்டியுள்ளார். நீச்சல் குளம், ஹெலிகாப்டர் இறங்கும் வசதியாக ஹெலிபேட் போன்றவை இங்கு அமைக்கப்பட்டுள்ளதாம்.
ஷாரூக்கான் வீதியை மீறி இந்த பண்ணை வீட்டை கட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பட்டிருக்கிறது. ஆனால், ஷாரூக் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, பினாமி பரிமாற்ற சட்டத்தின் கீழ், வருமான வரித்துறையினர் அதிகாரிகள், ஷாரூக்கானின் பண்ணை வீட்டை முடக்கியுள்ளனர்.