சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் | சினிமாவில் ஹீரோவாகும் சீரியல் நடிகர் : ஜோடி நடிகை யார் தெரியுமா? | 'எல்360' படப்பிடிப்பு ஆரம்பம் |
லண்டனை சேர்ந்த பிரபல அருங்காட்சியமான மேடம் டுசாட், உலகளவில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களின் மெழுகு சிலையை அருங்காட்சியமாக வைத்துள்ளது. இதன் கிளைகள் பல்வேறு நாடுகளில் உள்ளது. சிங்கப்பூரிலும் இதன் கிளை உள்ளது.
இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல நடிகையான கஜோலுக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக இந்த குழுவை சேர்ந்தவர்கள், மும்பை வந்து கஜோலின் முகத்தோற்றம், கண், முடி உள்ளிட்டவைகளை அளந்து சென்று உள்ளனர்.
இதுகுறித்து கஜோல் கூறுகையில், "என் மெழுகு சிலையை காண ஆவலாய் உள்ளேன். என் சிலையை உருவாக்க தேவையான அளவீடுகளை சுமார் 4 மணிநேரம் எடுத்து சென்றனர். இதன் பணிகள் முடிந்து, சிங்கப்பூரில் என் சிலை வைக்கப்படும் நாளை எண்ணி காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.