தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் ஜீனத் அமன். ஏராளமான வெற்றி படங்களில் நடித்து அன்றைய இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வந்தார். 60 வயதை கடந்த ஜீனத் அமன் தற்போது மும்பையில் வசித்து வருகிறர். இந்நிலையில் மும்பை ஜுஹு போலீஸில் தொழிலதிபர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்திருக்கிறார்.
அந்த தொழில் அதிபர் பெயர் அமர் கண்ணா. இவரும், ஜீனத் அமனும் நல்ல நண்பர்களாகவே இருந்துள்ளனர். சமீபத்தில் இவர்களுக்குள் சண்டை உருவானதால் ஜீனத், அமருடன் பேசுவை தவிர்த்தார். ஆனால் அமரோ, தொடர்ந்து ஜீனத்திற்கு போனில் பேசி தொல்லை கொடுத்துள்ளார். ஒருக்கட்டத்தில் பாலியல் ரீதியாகவும் அவரை தொல்லை கொடுக்க, ஜீனத் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஜீனத்தின் புகாரை ஏற்று, தொழிலதிபர் அமர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், அவரோ தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.