அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தென்னிந்திய திரையுலகில் மட்டுமல்லாது இந்திய திரையுலகிலும் கடந்த சில வருடங்களாக 'பாகுபலி' படத்தின் மூலம் அதிகம் கவனிக்கப்பட்ட ஹீரோயினாக விளங்கியவர் அனுஷ்கா. 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் அவருடைய தோற்றமும், அழகும், நடிப்பும் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. அந்தப் படங்கள் அவருடைய இமேஜை இன்னும் அதிகமாக உயர்த்தின.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்கா பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் கடந்த நான்கு வருடங்களாக அவருக்காகவே காத்திருந்து 'பாகமதி' படத்தை எடுத்து முடித்து கடந்த வாரம் வெளியிட்டார்கள். தெலுங்கில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வெற்றிக்காக அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார்.
“பாகமதி' படத்தைப் பாராட்டியதற்காக ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய திரையுலக வாழ்க்கையில் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு படமாக இந்தப் படத்தை உருவாக்கி, எனக்காகவே நான்கு வருடங்கள் காத்திருந்த இயக்குனர் அசோக், மற்றும் யுவி குழுவினர் ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள். நீங்கள் நிச்சயம் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே, நாங்கள் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் கடினமாகவே உழைக்கிறோம். என்னுடைய வாழ்க்கையில் நிபந்தனையற்ற அன்பு செலுத்தி வரும் என்னுடைய ரசிகர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி,” என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களே தோல்வியைத் தழுவி வரும் நிலையில் ஹீரோயின் அனுஷ்காவின் படம் வெற்றி பெற்றுள்ளது திரையுலகினருக்கும் மற்ற ஹீரோக்களின் ரசிகர்களுக்கும் ஆச்சரியமாக உள்ளது. இத்தனைக்கும் 'பாகமதி' வழக்கமான பேய்ப் படமாகத்தானே இருக்கிறது என அவர்கள் கமெண்ட் செய்கிறார்களாம்.