அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? |
கட்சிக்காக உழைக்க வந்துள்ளேன்; பதவிக்காக வரவில்லை, என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி தெரிவித்தார்.
பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, மதுரை மாவட்டம், அலங்காநல்லுாரில், தி.மு.க.,வினர் சாலை மறியல் செய்து, கைதாகினர். திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட இவர்களை சந்தித்த பின், உதயநிதி கூறியதாவது: மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், முதலில் வருவது, தி.மு.க.,வும், அதன் தொண்டர்களும் தான். சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க, எனக்கு விருப்பம் இருந்தாலும், படப்பிடிப்பு காரணமாக பங்கேற்க இயலவில்லை. அடுத்த போராட்டங்களில் கலந்து கொள்வேன்.
கட்சிக்காக உழைக்க வந்துள்ளேன்; பதவிக்காக வரவில்லை. அரசியலுக்கு நான், திடீர் என வரவில்லை. பிறந்ததில் இருந்தே, அரசியலில் தான் இருக்கிறேன். ஆறு ஆண்டுகளாக, தமிழ் பெயர் வைத்த, என் படங்களுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கவில்லை. அதன் பெயரும் அரசியல் தான். கமல், ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.