துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் மதுரவீரன். இதனை ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கி இருக்கிறார். இந்தப் படம் ஜல்லிக்கட்டு பற்றிய படம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இது ஜல்லிக்கட்டு படம் மட்டுமல்ல அதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும் பேசுகிற படம் என்கிறார் பி.ஜி.முத்தையா. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நான் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளேன். முதலில் ஒரு படம் இயக்க வேண்டும் என்று எண்ணிய போது நமக்கு தெரிந்த அல்லது நமது வாழ்கையில் இருந்து எடுத்தால் சரியாக இருக்கும் என்பதால் தான் “மதுரவீரன்” கதை உருவானது. இப்படம் ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்ல, அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே திரைக்கதை அமைந்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் இப்படத்தில் ஹீரோ என்றால் நல்லது மட்டுமே செய்வது போன்றும் வில்லன் என்றால் கெட்டது மட்டுமே செய்வது போன்றும் காட்சிகள் இல்லை. அனைத்து கதாபாத்திரங்களும் சராசரி மனிதர்களைப் போலவே இருக்கும்.
ஜல்லிக்கட்டு பற்றிய படம் என்றால் ஹீரோ மாட்டை அடக்குவது போன்ற காட்சிகள் எல்லாம் படத்தில் வைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இப்படத்திலும் அந்த மாதிரியான காட்சிகள் இல்லை. இப்படம் உண்மையான சம்பவங்களின் அடிப்படையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சியில் அந்த பகுதியில் உள்ள உண்மையான மாடுபிடி வீரர்களின் பெயர்களும், அந்த பகுதியில் உள்ள மாடுபிடி வீரர்களையும் பயன்படுத்தியுள்ளோம். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்பே கதை உருவாக்கிவிட்டோம். ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றிய சிறிய தொகுப்பு படத்தில் உள்ளது என்கிறார் இயக்குநர் முத்தையா.