தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அனுஷ்கா நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'பாகமதி'. இப்படத்தில் தெலுங்கு ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்த ஒரே முகம் அனுஷ்கா மட்டுமே. படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரங்களான ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் தெலுங்கு ரசிகர்களுக்கு அதிகம் தெரியாத முகங்கள். இருந்தாலும் 'பாகமதி' படத்தை அனுஷ்காவை நம்பி மட்டுமே எடுத்தனர். அந்த நம்பிக்கையை ரசிகர்களும் வீணாக்கவில்லை.
பொங்கலுக்கு வெளிவந்த தெலுங்குப் படங்களான 'அஞ்ஞாதவாசி, ஜெய் சிம்ஹா' ஆகிய பெரிய படங்கள் வினியோகஸ்தர்களை ஏமாற்றிய நிலையில், அதன் பின் வெளிவந்த 'பாகமதி' படம் அவர்களுக்கு லாபம் தரும் படமாக அமையலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியான முதல் மூன்று நாட்களில் மட்டும் ஆந்திரா, தெலுங்கானாவில் சுமார் 25 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாம். பங்குத் தொகையாக மட்டும் சுமார் 15 கோடி கிடைத்துள்ளது என்கிறார்கள்.
படத்தின் பட்ஜெட் மட்டும் 25 கோடி என சொல்லப்பட்டாலும் சுமார் 15 கோடியிலேயே இந்தப் படத்தை எடுத்து முடித்திருப்பார்கள். ஒரே ஒரு பாழடைந்த பங்களாதான் படத்தின் அதிகபட்ச செலவு, மற்றும் சில கிராபிக்ஸ் காட்சிகளுக்கான செலவுகள். அதனால் இந்தப் படம் இனிமேலும் வசூலிக்கும் தொகை படத்திற்கான லாபமாக மட்டுமே இருக்கும் என்கிறார்கள்.
அதே சமயம், தெலுங்கில் கிடைத்த வரவேற்பு தமிழில் கிடைக்கவில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.