டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிவாஜி கேர்ள் ஸ்ரேயா சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்தவர், தற்போது நரகாசூரன் படத்தில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார். தெலுங்கில் மோகன்பாபு இரண்டு வேடங்களில் நடித்துள்ள காயத்ரி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் டைட்டில் வேடத்தில் நடித்துள்ள ஸ்ரேயா, முதன்முறையாக பாரம்பரியம் மிக்க ஒரு கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார்.
இதுபற்றி ஸ்ரேயா கூறுகையில், நகரத்து கதைகளிலேயே அதிகமாக நடித்துள்ள எனக்கு பாரம்பரிய மிக்க கிராமத்து பெண்ணாக நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்து வந்தது. அதனால் காயத்ரி படத்தில் அப்படியொரு வேடம் எனக்கு கிடைத்தபோது பெரிய மகிழ்ச்சியடைந்தேன். அதோடு, டைரக்டர் சொன்ன கதையை உள்வாங்கி அந்த கதாபாத்திரமாக முழுமையாக என்னை மாற்றிக்கொண்டு நடித்தேன்.
கிராமத்து பெண்களின் நடை உடை பாவணைகளை உள்வாங்கி எனது நடிப்பில் அதை பிரதிபலித்தேன். அதனால் காயத்ரி படம் இதுவரை திரையில் பார்த்த ஸ்ரேயாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஸ்ரேயாவை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில், இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த வேடம் எனக்கு முழு மனநிறைவை கொடுத்துள்ளது என்கிறார் ஸ்ரேயா.