திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மற்றும் அவரது மனைவி நம்ரதாவும் சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் யாராவது நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க பணவசதி இல்லாமல் கஷ்டப்படும் தகவல் அவர்கள் கவனத்துக்கு வந்தால் உடனடியாக உதவி செய்து அவர்களை நோயின் பிடியில் இருந்து காப்பாற்றுவதை வழக்கமாகக் கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் தனீஷ் என்ற ஏழை சிறுவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்த மகேஷ்பாபு அவரது சிகிச்சைக்கு தேவையான பண உதவி செய்து அந்த சிறுவனை காப்பாற்றியிருக்கிறார். இதையடுத்து சிறுவன் தனீஷின் குடும்பத்தார் மகேஷ் பாபுவை சந்தித்து நன்றி தெரிவித்து, இந்த தகவலை ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.