தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை அமலா பால் ஒரு கோடிக்கும் கூடுதலான மதிப்புள்ள சொகுசு கார் வாங்கி. அதனை போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்ததன் மூலம் 20 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவர் மீது கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பல முறை சம்மன் அனுப்பிய பிறகு அமலா பால் கடந்த வாரம் போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயம். இதனால் இதுபோன்ற வழக்கை சந்திக்கும் பகத் பாசிலும், சுரேஷ் கோபியும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். அமலா பால் போலீசில் கைதானால் அது தன் இமேஜை பாதிக்கும் என்பதால் கைதாகாமல் வழக்கை சந்திக்க பலவாறு முயற்சித்தார். ஆனால் அது நடக்கவில்லை.
இந்த நிலையில் கொச்சி குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகுமாறு அமலா பாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனால் வேறு வழியில்லாமல் நேற்று மாலை அமலாபால் போலீசில் ஆஜரானார். போலீசார் அவரை கைது செய்து ஒரு சில மணி நேரத்தில் சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர். வழக்கு தொடர்ந்து நடந்த வருகிறது.