பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
அரசியலில் இருந்து விலகி மீண்டும் முழுநேர நடிகராகியிருக்கிறார் சிரஞ்சீவி. கைதி எண் 150படத்தை அடுத்து சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை கதையில் உருவாகி வரும் சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். சுதந்திரத்திற்கு முந்தைய காலத்து கதையில் நடக்கும் இந்த படத்தில் தாடி கெட்டப்பில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. சுரேந்தர் ரெட்டி படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தை அடுத்து தற்போது ராம்சரண் நடித்து வரும் ரங்கஸ்தலம் படத்தை இயக்கி வரும் சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. சமீபத்தில் சுகுமாரிடத்தில் சில கதைகளை கேட்ட சிரஞ்சீவி, அதில் ஒரு மாஸ் ஆக்சன் கதையை ஓகே செய்திருக்கிறாராம். சமூக நோக்கமுள்ள அந்த கதைக்காக ஓரளவு வெயிட் குறைக்கிறாராம் சிரஞ்சீவி. சைரா நரசிம்ம ரெட்டி படப்பிடிப்பு முடிந்ததும் சிரஞ்சீவி நடிக்கும் புதிய பட வேலைகள் தொடங்குகிறதாம்.