டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இந்திய அரசாங்கம் பத்ம விபூஷண் விருது அறிவித்தது. அவருக்கு திரையுலகத்தைச் சார்ந்த பலர் வாழ்த்து தெரிவித்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஷால் உள்ளிட்ட பலர் விருது அறிவிக்கப்பட்ட அன்றே வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் பல இசைக் கலைஞர்களால் பாராட்டுப்படும் இளையராஜாவுக்கும் அவருடன் நெருங்கிப் பழங்கியவர்கள் சிலருக்கும் இடையே இப்போது எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களில் இளையராஜாவின் இளமைக் காலம் தொட்டே அவருடன் இசைப் பயணம் செய்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் முக்கியமானவர்.
கடந்த ஆண்டு, அமெரிக்காவில் எஸ்பிபி இசை நிகழ்ச்சி நடத்திய போது, தன் பாடல்களைப் பாடக் கூடாது என இளையராஜா தரப்பிலிருந்து எஸ்பிபிக்கு வக்கீல் நோட்டீஸ் சென்றது. அந்த விவகாரம் அப்போது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. அதனால், இருவரும் பேசிக் கொள்வதை நிறுத்திவிட்டார்கள் என்றும் தகவல் வெளியானது. இருந்தாலும் எஸ்பிபி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவருடைய வாழ்த்தில், “இளையராஜாவை நெருங்கிய பிறகு பத்ம விபூஷண் விருதுக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.