ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் கமல்ஹாசன் சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், அரசியல்வாதி இப்படி தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நாட்டு நடப்புகளை மாணவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அது உங்கள் கடமை. நான் தனியாக நிற்கவில்லை, நீங்கள் தான் நான்.
நீங்கள் என்னுடன் வாருங்கள் என்று சொல்லவில்லை, எப்படியாவது வாருங்கள் என்று சொல்கிறேன். நான் தலைவனாக வரவில்லை, தலைவர்களை சந்திக்கவே வந்திருக்கிறேன். நீங்கள் தான் நான் என்பதை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது அதற்காக தான் இங்கு வந்தேன். நாடு, படிப்பு, கல்வி கெட்டுப்போச்சு என பேசுவது மட்டும் சரியா, தவறை இன்றே சரி செய்ய வேண்டும். மாணவர்களால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும், குறைகளை கண்டறிந்து மாற்றத்தை கொண்டு வாருங்கள்.
அமைதியாக இருந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய மகாத்மா காந்தி எனக்கு பிடித்த அரசியல் தலைவர். இவர் தவிர அம்பேத்கர், எம்ஜிஆர்., பெரியார், கருணாநிதி என பல அரசியல் தலைவர்களையும் பிடிக்கும். சும்மா இருங்கள், பேசாதீர்கள் என்பது ஜனநாயமா...? இன்றைக்கு தேவர் மகன், அன்பே சிவம் போன்ற படங்களை எடுக்க முடியாது. ஊழலற்ற அரசியல் என்பது சாத்தியமில்லை. சாத்தியம் என்பது சொல்ல அல்ல செயல். நாளை நமதே என்பது உங்களையும் சேர்த்து தான்.
ஓட்டு என்பது வியாபாரம் செய்யும் விளையாட்டு அல்ல. நாட்டில் கொள்ளையர்கள் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்கள் அப்படி வளர பெற்றோர்கள் வழி விட வேண்டும்.