பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வட மாநிலங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள படம் பத்மாவத். சித்தூர் ராணியை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்தவர்கள் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்புக்கிடையே பத்மாவத் படம் நேற்று முதல் ரிலீஸாகி உள்ளது.
ஆனால், இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உ.பி., ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியானா உட்பட பல மாநிலங்களில், வன்முறை வெடித்தது. அரசு பஸ்கள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வன்முறையை தடுக்க தவறியதாக, நான்கு மாநில அரசுகள் மீது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் அரவிந்த்சாமி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள். பொதுமக்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில், சமாதானத்திற்கும் இடமில்லை. நிர்வாகத்திறமையின் தோல்விக்கு இதைவிட ஒரு காரணமும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.