ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்பு - வரலட்சுமி நடித்த போடா போடி படத்தில் இயக்குனரானவர் விக்னேஷ் சிவன். அந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. என்றபோதும் அதன்பிறகு விஜய் சேதுபதி - நயன்தாரா நடித்த நானும் ரெளடி தான் படம் ஹிட்டடித்து அவருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. அதையடுத்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி தற்போது முன்னணி இயக்குனராகிவிட்டார் விக்னேஷ்சிவன்.
இந்த நிலையில், அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கயிருப்பதாக தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் ரெளடிதான் படத்தை இயக்குவதற்கு முன்பே சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி ஓகே பண்ணி விட்டேன். ஆனால் அவர் அதற்கு முன்பே பல படங்களில் கமிட்டாகியிருந்தார். அதனால் அதன்பிறகு நானும் ரெளடிதான், தானா சேர்ந்த கூட்டம் என்ற இரண்டு படங்களை இயக்கி விட்டேன். அடுத்தபடியாக சிவகார்த்திகேயனுக்காக காத்திருக்கிறேன். மேலும், அந்த படத்தில் நயன்தாரா நடிப்பாரா? மாட்டாரா? என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்கிறார் விக்னேஷ்சிவன்.