பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
சமீபகாலமாக வலுவான கதாபாத்திரங்களில் நடித்து வரும் டாப்சி, பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அவ்வப்போது கருத்து கூறி வருகிறார். இந்நிலையில், டில்லியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காப்புக்கலை மையத்தை திறந்து வைத்திருக்கிறார் நடிகை டாப்சி. அதோடு பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி கொடுத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்கிற முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
அதன்காரணமாக, ஏற்கனவே சில தற்காப்புக்கலை மையங்கள் திறந்துள்ள டாப்சி, தற்போது நாடெங்கிலும் அதுபோன்ற மையங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார். அதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தற்காப்பு கலை நிபுணர்களின் உதவியை அவர் நாடியிருக்கிறார். மேலும், போதுமான கல்வியும், தற்காப்பு கலையும் பெண்களுக்கு கொடுத்தால் ஆணாதிக்கம் மிகுந்த உலகில் அவர்களால் சாதிக்க முடியும் என்றும் டாப்சி தெரிவித்துள்ளார்.