'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் டி.வியின் நட்சத்திர இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது இதன் 6வது சீசன் கடந்த 21ந் தேதி தொடங்கியது. வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதன் துவக்க நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு வழக்கம்போல லட்சக் கணக்கில் பணம், வீடு பரிசுகள் இருக்கிறது. அதோடு இந்த முறை கூடுதல் போனசாக சூப்பர் சிங்கர் டைட்டில் ஜெயிக்கிறவர் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் திரைப்படத்தில் பாட வாய்ப்பளிக்கப்படுகிறது.
"நிகழ்ச்சியின் பாடகர்கள் தற்போது முன்னணியில் இருக்கும் எந்த பாடகர் பாடகி போன்றும் பாட முயற்சிக்காமல் தங்களது சொந்த குரலில் பாடவும், தங்களது ஒரிஜினாலிட்டியையும், பர்சனாலிட்டியையும் வெளிக் கொண்டு வர வேண்டும்" என்று ரகுமான் கேட்டுக் கொண்டிருக்கிறார்.