டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
முகவரி துரை நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் ஏமாலி. இதில் சாம் ஜோன்ஸ் என்ற புதுமுகம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி, ரோஷினி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். படத்தில் சாம் ஜோன்ஸ் 4 கேரக்டர்களில் நடிக்கிறார். சமுத்திரகனி, சிங்கம்புலி, பாலசரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். சாம் டி.ராஜ் இசை அமைக்கிறார், ரத்தீஷ் கண்ணன், பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். படம் வருகிற பிப்ரவரி 2ந் தேதி ஒளிபரப்பாகிறது.
படத்தை பற்றி வி.இசட் துரை கூறியதாவது: இன்றைய இளம் தலைமுறையினர் காதலையும், காமத்தையும் எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் கதை. அதற்காக இது ஆபாச படம் இல்லை. பக்குவமாக சொல்கிற கதை. புதுமையாகவும் சொல்கிற கதை. படத்தில் 4 தனித்தனி கதைகள். நான்கு கதையும் ஒரு இடத்தில் இணையும். இந்த 4 கதையிலும் சமுத்திரகனியும், புதுமுக நடிகர் சாம் ஜோன்சும் இருப்பார்கள். இருவருக்குமே 4 வெவ்வெறு கேரக்டர்கள்.
சமுத்திகனி என்றால் விரைப்பாக அறிவுரை சொல்லும் பாத்திரங்களில் தான் நடிப்பார் என்ற இமேஜை இந்தப் படம் மாற்றும். அதேபோல முதல் படத்திலேயே நான்கு கேரக்டர் என்றாலும் அதை தாங்கி நடித்திருக்கிறார் சாம் ஜோன்ஸ். முதல் படத்திலேயே பெரிய சுமை அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. அதை அவர் நன்றாக சுமக்கவும் செய்திருக்கிறார் என்கிறார் வி.இசட் துரை.