பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விக்னேஷ்சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் - தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்தில் லஞ்சம் வாங்கும் சிபிஐ அதிகாரியாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார் சுரேஷ் மேனன்.
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் தனக்கு பயன்படுத்தப்பட்ட டப்பிங் குரல் குறித்து சில தினங்களுக்கு முன் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்திருந்தார் சுரேஷ்மேனன்.
இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
"தானா சேர்ந்த கூட்டத்தில் எனது குரல் ஏன் இடம்பெறவில்லை எனக் கேட்கும் அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் மொத்த படத்துக்கும் டப்பிங் பேசியிருந்தேன். ஆனால், படத்தில் வேறு ஒரு குரலை பயன்படுத்தியுள்ளனர். என்னுடைய குரல் மாதிரியை இந்த வீடியோ மூலம் கேளுங்கள். எனது சொந்தக் குரலே எனது கதாபாத்திரத்துக்கு சிறப்பாகப் பொருந்தியிருக்கும் என நான் நினைக்கிறேன். படத்தைப் பார்த்தவர்கள் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்" என்றொரு நிலைத்தகவலையும் அந்த வீடியோவின் கீழ், பகிர்ந்திருக்கிறார்.
தானா சேர்ந்த கூட்டம் படம் தொடர்பாக தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்த பிறகும், நடிகர் சூர்யா இதுபற்றி தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லையே என்ற வருத்தத்திலும் இருக்கிறார் சுரேஷ்மேனன்.