‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களை தன்னுடைய சுயவிளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் சினிமாக்காரர்கள். இவர்களில் சற்றே வித்தியாசப்பட்டு நிற்பவர்கள்... பிரகாஷ்ராஜ், ஜி.வி. பிரகாஷ்குமார்.
பிரகாஷ்ராஜ் பல்வேறு சமூகப்பிரச்சனைகள் அரசியல் விமர்சனங்களை தன்னுடைய ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகிறார். ஜல்லிக்கட்டு, நெடுவாசல், அனிதாவின் மரணம் என மக்கள் பிரச்சனைகளைப் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ்குமார்.
சமீபத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கூடுதலாக 25 சதவீதத்தை அரசு பேருந்து கட்டணத்துக்கு செலவிடும் சூழல் உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்றவற்றால் கடும் இன்னலுக்கு ஆளாகிவரும் மக்கள், இந்த பேருந்து கட்டண உயர்வால் தற்போது மேலும் அவதியடைந்து வருகின்றனர்.
இதைப் பற்றி திரையுலகினர் எவரும் கண்டுகொள்ளவில்லை. கட்டண உயர்வு சுமையை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டரில் தைரியமாக கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமல்ல, காணவில்லை, ரத்தம் தேவை போன்ற பதிவுகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் பண்ணுகிறார் ஜி.வி.பிரகாஷ்.