ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு ஹீரோ நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவது என்பது மிக அபூர்வமான விஷயம். கடந்த காலங்களில் தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட சம்பவம் சில தடவை நடந்துள்ளது. அதன் பிறகு ஒரு ஹீரோவின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியிடக்கூடாது என்று கவுன்சில் கட்டுப்பாடு கொண்டு வந்தது.
இந்தநிலையில், ஜீவா நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழல் உருவாகி இருக்கிறது! சுந்தர்.சி.இயக்கத்தில் உருவாகியுள்ள 'கலகலப்பு-2' , மைக்கேல் ராயப்பன் இயக்கத்தில், அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கீ' ஆகிய படங்கள்தான் அவை.
இந்த இரண்டு படங்களும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக இரண்டு தயாரிப்பாளர்களும் விளம்பரம் செய்து வருகின்றனர். ஏதாவது ஒரு படத்தை ஒரு வாரம் தள்ளி வெளியிடும்படி கவுன்சில் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு இரண்டு தயாரிப்பாளர்களும் உடன்படாமல் உள்ளனர்.
இந்த விஷயத்தில் தலையிட்டு சுமுகமான ஏற்பாட்டை செய்ய வேண்டிய ஜீவாவோ அமைதியாக இருக்கிறாராம். கடந்த ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ஒரே படம் 'சங்கிலி புங்கிலி கதவத்தொற' படம் தான். இந்த படம் படு தோல்வியடைந்தது. எனவே, இந்த ஆண்டு துவக்கத்திலேயே தன்னுடைய நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகவிருப்பது தனக்கு மார்க்கெட் ரீதியில் உதவும் என்பதால் பேசாமல் இருக்கிறாராம் ஜீவா.