தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் மட்டுமல்ல, மலையாளத்திலும் கூட ஓரளவு வளர்ந்த ஹீரோக்கள் தனியாக தயாரிப்பு நிறுவனம் துவங்கிவிடுவது வழக்கம் தான். ஜெயசூர்யா, நிவின்பாலி, ஆசிப் அலி ஆகியோர் தயாரிப்பாளர்களாக மாறிய வரிசையில் தற்போது இளம் நடிகரான டொவினோ தாமஸும் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார்.
தனுஷ் மலையாளத்தில் தயாரித்த தரங்கம், தயாரிக்க இருக்கும் மரடோனா ஆகிய படங்களில் ஹீரோவாகவும், தமிழில் தனுஷின் 'மாரி-2' படத்தில் வில்லனாகவும் நடிக்கும் டொவினோ தாமஸ், 'குப்பி கம்பெனி' என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார்.
அவர் நடிப்பில் வெளியான 'குப்பி' படம் அவருக்கு பாராட்டுக்களை பெற்றுத்தந்ததன் காரணமாக இந்த பெயரை அவர் வைத்துள்ளாராம். குப்பி பட இயக்குனரான ஜான் பால் ஜார்ஜும் இந்த நிறுவனத்தின் பங்குதாரராக இணைந்துள்ளார்.