தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
ஒரே ஆண்டில் 8 தெலுங்கு திரைப்படங்களுக்கு இசை அமைத்து சாதனை படைத்திருக்கிறார் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இது தெலுங்கில் அபூர்வமான ஒன்றாகும். கைதி நம்பர் 150, நேனு லோக்கல், ராரண்டோய் வேடுக சூதம், துவ்வாட ஜெகந்நாதம், ஜெய ஜானகி நாயகா, ஜெய் லவ குசா, உந்நாதி ஒகட்ட ஜிந்தகி, மிடில் கிளாஸ் அப்பாயி என எட்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்த எட்டு படங்களும், அந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. ஒரே ஆண்டில் எட்டு படங்களுக்கு இசையமைத்து எட்டு படங்களின் பாடல்களையும் ஹிட்டாகிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்திற்கு பாராட்டுகள் குவிகின்றன.
அதேப்போல் ஒரு திரைபடத்தில் இடம்பெற்ற பாடல்களை, பட வெளியீட்டிற்கு முன் வாரந்தோறும் சிங்கிள் சிங்கிள் ட்ராக்காக வெளியிடும் உத்தியை தெலுங்கில் 'கைதி நம்பர் 150 ' மூலம் தொடங்கி வைத்ததும் இவர் தான். இன்று அது அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபலமாகிவிட்டது. லிரிக் வீடியோஸில் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் புகைப்படத்தையும், கான்செப்ட்டையும், கிராபிக்ஸையும் இணைத்து வெளியிடுவதையும் தேவிஸ்ரீபிரசாத் தான் அறிமுகப்படுத்தினார் .
தற்போது இவர் தமிழில் சாமி 2ம் பாகத்திற்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் மலேசியாவில் நடந்த நடிகர் சங்க கலைவிழாவில் தேவி ஸ்ரீபிரசாத் கலந்து கொண்டபோது இந்த சாதனை குறித்து கூறி ரஜினியும், கமலும், தேவி ஸ்ரீ பிரசாத்தை பாராட்டி மகிழ்ந்தனர்.