பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
த்ரிஷா தற்போது நடித்து வரும் படம் மோகினி. சிங்கம் 2 படத்தை தயாரித்த எஸ்.லக்ஷ்மண்குமார் தயாரிக்கிறார். பூர்ணிமா பாக்யராஜ், யோகிபாபு, சுவாமிநான், சுரேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். இது பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பேய் படம். இதனை விஜய் நடித்த மதுர, அரசாங்கம், மிரட்டல் படங்களை இயக்கிய ஆர்.மதேஷ் இயக்கி உள்ளார். மோகினி பற்றி அவர் கூறியதாவது:
என்னுடைய முந்தைய படங்களின் வரிசையில் தற்போது மிக பெரிய படைப்பாக உருவாகி உள்ள படம் மோகினி. த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் வெகுஜனங்களிடம் எளிதாக சென்றடையும்.
மக்கள் எதிர்பார்க்கும் அனைத்துமே இப்படத்தில் உள்ளது. கிட்டதட்ட 80% காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கபட்டுள்ளன. ஹாரர் பட வரிசைகளில் மிகவும் மாறுபட்டு உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய விஷூவல் எபக்ட்ஸ் காட்சிகள் உள்ளன. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் படம் வந்துள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே இப்படம் உருவாகியுள்ளது. படத்தை பார்க்கும் அனைவரும் தங்களோடு இணைத்து கொள்ள முடியும்.
இந்தப்படத்தின் கதையை பற்றி கேள்விப்பட்டு மாதவன், என்னை கூப்பிட்டு பேசினார். இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சம்பளம், கால்ஷீட் பற்றி எதுவும் பேச வேண்டாம். பழிவாங்கும் பெண் என்று இருக்கிற கதையை பழிவாங்கும் ஆண் என்று மாற்றுங்கள் நான் நடிக்கிறேன் என்றார். அப்போது படம் 40 சதவிகிதம் முடிந்திருந்தது. அதனால் அவரிடம் த்ரிஷா நடிப்பில் 40 சதவிகித படம் முடிந்துவிட்டது. இனி அதை மாற்ற முடியாது என்று கூறிவிட்டேன் என்றார்.