விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
சின்னத்திரையில் தொகுப்பாளினாக இருந்தவர் ரம்யா. பெரும்பாலான சினிமா பிரபலங்களின் செல்லத்தோழி. பலர் நடிக்க அழைத்தும், அசைந்து கொடுக்காதவர், மணிரத்னம் அழைத்ததும் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்தார். அதன்பிறகு தொடர்ந்து நடிப்பது என்று முடிவு செய்தார். தற்போது சங்கத் தலைவன் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
இயக்குனர் வெற்றி மாறனின் உதவியாளரும், உதயம் என்.எச் 4 படத்தை இயக்கியவருமான மணிமாறன் இயக்குகிறார். இதில் அறம் படத்தில் நடித்த சுனு லட்சுமியும், ரம்யாவும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். சமுத்திரக்கனி, கருணாஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இது எழுத்தாளர் பாரதிநாதன் எழுதிய தறியுடன்... என்ற நாவலை மையமாக கொண்டு தயாராகிறது. கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி சார்பில் வெற்றிமாறன் தயாரிக்கிறார்.
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் நடக்கும் நெசவு தொழிலை மையாக கொண்ட கதை. இதில் ரம்யா நெசவு தொழிலாளியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
"நான் ஹீரோயினாக நடிக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். கதையின் முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். என்னிடம் உள்ள நடிப்பு திறமைக்கு சவாலாக அமைந்திருக்கும் படம். முடிந்தவரை பெஸ்டை கொடுக்க முயற்சிப்பேன். சங்கத்தலைவன் என் கேரியரில் முக்கியமானவாக இருப்பான்" என்கிறார் ரம்யா.