மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஒவ்வொரு வருடத்தின் முதல் மாதத்தில் பொங்கல் தின வெளியீடுகள் என்றாலே திரையுலகத்தில் ஒரு பரபரப்பிருக்கும். அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் அப்போது வெளியாகும் படங்கள் பெரிய வசூலைப் பெற வாய்ப்புகள் அதிகம். இந்த வருடப் பொங்கலுக்கு மூன்றே மூன்று படங்கள்தான் வெளிவந்தன.
'தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி' ஆகிய மூன்று படங்கள் அப்போது வெளிவந்தாலும் மூன்று படங்களுமே பிரம்மாண்ட வெற்றியைப் பெறவில்லை என்பது சோகம். அந்த மூன்றில் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் மட்டுமே தப்பிக்கும் என்றார்கள். பொங்கல் விடுமுறை முடிந்த பின் அப்படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை. மற்ற இரண்டு படங்கள் நஷ்டத்தில் லாபத்தைக் கொடுக்குமா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொங்கலுக்கு அடுத்து ஜனவரி மாதத்தில் குடியரசு தினமான 26ம் தேதியன்று, பொங்கலுக்கு வெளிவர இயலாத படங்கள் வெளிவரும். நாளை மறுநாள் வரும் 26ம் தேதியில் 'நிமிர், மன்னர் வகையறா' ஆகிய இரண்டு நேரடித் தமிழ்ப் படங்களும், 'பாகமதி' டப்பிங் படமும் வெளியாக உள்ளது. இந்த மூன்று படங்களுமே பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை.
'நிமிர்' படம் மலையாளத்தில் வெற்றியும், வரவேற்பையும் பெற்ற 'மகேஷின்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக் என்பதுதான் படத்தின் பிளஸ் பாயின்ட். 'மன்னர் வகையறா' படம் நகைச்சுவையில் ரசிக்க வைக்கும் என்பது படத்திற்குக் கூடுதல் பலம். 'பாகமதி' படம் 'பாகுபலி 2'க்குப் பிறகு வரும் அனுஷ்கா படம் என்பதால் வரவேற்பு இருக்கலாம். இவையனைத்தும் எதிர்பார்ப்புதான், படங்கள் வெளிவந்த பிறகுதான் ரசிகர்கள் வரவேற்பு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.