'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி, பிந்து மாதவி, சூரி மற்றும் பலர் நடிக்கும் 'பக்கா' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் கதாநாயகன் விக்ரம் பிரபு கலந்து கொள்ளவில்லை. அவருக்காக வெகு நேரம் படக்குழுவினர் காத்திருந்தார்கள். அவர் டிராபிக்கில் மாட்டிக் கொண்டார், வந்து கொண்டிருக்கிறார், வந்துவிடுவார் என்று பேசிக் கொண்டார்கள். ஆனால், கடைசியில் அவர் இல்லாமலேயே நிகழ்ச்சி ஆரம்பமானது. அதன் பிறகாவது அவர் வருவார் என்று எதிர்பார்த்திருந்தார்கள். அவர் கடைசி வரை வரவேயில்லை.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகி நிக்கி கல்ரானி, விக்ரம் பிரபுவின் ஷுட்டிங் முடிய நேரமாகிவிட்டதால் வர முடியவில்லை என எனக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார் என்று மொபைல் போனிலிருந்து படித்தார். அதில் படத்தின் இசையமைப்பாளரைப் பற்றியும், நிகழ்ச்சிக்கு வர முடியாததால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் மட்டுமே கூறியிருந்தார்.
பொதுவாக, இது போன்ற நிகழ்ச்சிகளில் படத்தின் நாயகிகள் தான் வர மாட்டார்கள். அதைப் பற்றி யாரும் கவலைப்படவும் மாட்டார்கள். படத்தின் நாயகன் இல்லாமல் எந்த விழாவும் நடைபெறாது. அவரிடம் ஒப்புதல் வாங்கிய பிறகுதான் விழாவையே நடத்துவார்கள்.
'பக்கா' விழாவிலும் விக்ரம் பிரபுவிடம் ஒப்புதல் வாங்கியிருந்தும் அவர் வராதது அன்று சலசலப்பை ஏற்படுத்தியது. விசாரித்துப் பார்த்ததில் படத்தில் தயாரிப்பாளர் சிவகுமார் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளாராம். அதன் காரணமாக படப்பிடிப்பு சமயத்திலேயே விக்ரம் பிரபு கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் என்கிறார்கள். அதனால் தான் அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லையாம். இனிமேலும், அவர் 'பக்கா' படத்தின் பிரமோஷனுக்கு வருவாரா என்பது சந்தேகம் என்கிறார்கள்.