ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
தமிழக அரசியல் களத்தில் இறங்கிவிட்டனர் நடிகர்கள் ரஜினியும், கமலும். அரசியலுக்கு வருபவர்கள் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். கமல் உடனே குரல் கொடுக்காவிட்டாலும் ஒருவாரம் கழித்தாவது குரல் கொடுத்து விடுவார். ஆனால், எல்லாவற்றுக்கும் அமைதியாகவே இருப்பார்.
தற்போது தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்னை பஸ் கட்டணம் உயர்வு. நிதிபற்றாக்குறையை சமாளிக்கவே பஸ் கட்டணத்தை உயர்த்தியதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. ஆனால் இந்த கட்டணம் சாமானிய மக்களை வெகுவாக பாதித்திருக்கிறது. பொதுமக்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வந்து, நான்கு நாட்கள் கழித்து நடிகர் கமல்ஹாசன் மவுனம் கலைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன் டுவிட்டரில், "பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள், அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே...!" என்று டுவீட் செய்துள்ளார்.
கமலாவது நான்கு நாட்கள் கழித்து பஸ் கட்டணம் குறித்து தன் கண்டனத்தை பதிவு செய்துவிட்டார். ஆனால் ரஜினியோ வழக்கம் போல இன்னும் அமைதி காத்து வருகிறார்.