தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் கமல்ஹாசன், அரசியல் பயணத்தை முன் எடுத்து வைத்துவிட்டார். வருகிற பிப்., 21-ம் தேதி முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் தன் அரசியல் பயணத்தை துவங்குகிறார். அன்றைய தினமே தனது கட்சியின் பெயரையும் அறிவிக்கிறார்.
முன்னதாக நடிகர் கமல்ஹாசன் நேற்றும், இன்றும் தனது நற்பனி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ரசிகர்களை சந்தித்த கமல், இன்று மற்ற 27 மாவட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அரசியல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆலோசனைக்கு பின்னர் ரசிகர்கள் முன்னிலையில் பேசிய கமல்ஹாசன், மக்களை நோக்கிய ஒரு பயணம் தான் இது. இந்த பயணத்தை துவங்கி வெகு நாளாகிவிட்டது. 37 வருடம் உடன் நடக்கும் சகோதரர்கள் என்னுடன் உள்ளனர். 37 வருடம் எனக்கு என்ன கிடைத்தது என கேட்காதவர்கள் இனியும் கேட்க மாட்டார்கள்.
நாம் வெற்றியை நோக்கி செல்கிறோம். நாம் நோக்கி செல்வது கஜானாவை நோக்கி அல்ல. மக்களின் முன்னேற்றத்தை நோக்கி. அதனால் தான் என்னால் சொல்ல முடிகிறது வெற்றி நிச்சயம் என. நமது அளவுகோளும், பாதையும் நீளமானது. அதை நோக்கி செல்கிறோம்.
நான் யாரிடமும் ஜாதி, மதம் கேட்டது இல்லை. இனியும் அப்படி தான். அதேபோல், யார் எந்த கட்சி என கேட்டதில்லை. இனி, என்ன கட்சி, கொடி என கேட்டு தெரிந்து கொள்வேன். இந்த கூட்டத்தில் நிறைய பேர் சேர உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் மூத்த அண்ணன்கள்.
நாம் என்ன செய்தாலும் கவனிக்கப்படுவோம். எனவே கண்ணியத்தடன் நடந்து கொள்ளுங்கள். பிதற்றலான சுவரொட்டிகள் ஒட்ட வேண்டாம். கண்ணியம் காக்கப்பட வேண்டும். நமக்கு விராதிகள் சமூகத்திற்கு விரோதிகள். தேவையில்லாமல் நாம் யாரையும் சாட தேவையில்லை. மக்களை நோக்கி செல்லும் பயணம் விரைவாக நடக்க வேண்டும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.