'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் மரகதநாணயம் படத்தில் நடித்த ஈரம் ஆதி, அதன்பிறகு தெலுங்கில் நின்னுகோரி, அஞ்ஞாதவாசி ஆகிய படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஆதிக்கு கார் விபத்து ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகின.
ஆனால் அந்த செய்தி வெளியாகி சில மணி நேரங்களில் தனது டுவிட்டரில், எனக்கு எந்த விபத்தும் நேரவில்லை. என்னைப்பற்றி வெளியான செய்தியில் துளியும் உண்மையில்லை. அதனால் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ள ஆதி, எனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடப்பதால் அந்த படத்திற்காக என்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.