‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் 'பக்கா'. அறிமுக இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை 'பென் கன்ஸ்டோரியம்' நிறுவனம் சார்பில் டி.சிவக்குமார் தயாரித்துள்ளார்.
இலங்கைத்தமிழரான இவர் இதற்கு முன் 'அதிபர்' என்ற படத்தை தயாரித்து, முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். பக்கா படத்திலும் தயாரிப்பாளர் டி.சிவக்குமார் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த தகவலை கதாநாயகன் விக்ரம் பிரபுவிடம் இயக்குநர் சொல்லாமல் மறைத்துவிட்டாராம். பின்னர் இதை அறிந்த விக்ரம் பிரபு, தயாரிப்பாளர் படத்தில் நடிக்கும் விஷயத்தை என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று இயக்குநருடன் கோபப்பட்டிருக்கிறார்.
தன்னுடைய காட்சிகளை குறைத்து ஒருவேளை தயாரிப்பாளருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்குமோ என்பது விக்ரம் பிரபுவுக்கு வந்த சந்தேகம். அதன் காரணமாகவே இயக்குநருக்கு டோஸ் விட்டிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக விக்ரம் பிரபுவை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.
இது ஒரு பக்கம் இருக்க, பக்கா படத்தை தொடர்ந்து தன்னுடைய நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் டி.சிவக்குமார். அந்தப் படத்துக்கு 'தர்மம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. பெண்களை மையப்படுத்திய கதை இது. 'பக்கா' வெளியானதும் 'தர்மம்' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகின்றன.